இந்தியச் சிறைகளில் அதிக அளவில் முஸ்லிம்கள்!

November 3, 2006

இந்திய முஸ்லிம்களின் மக்கள்தொகை விகிதத்திற்கும் அதிகமான அளவில் முஸ்லிம்கள் இந்தியச் சிறைகளில் இருப்பதாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

- 10.6 விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்ட மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிறையிலிருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 32.4 விழுக்காடாக இருக்கிறது.

- புதுதில்லி மக்கட்தொகையில் 11.7 விழுக்காடு உள்ளவர்கள் முஸ்லிம்கள் ஆவர். இங்கு சிறையிலிருக்கும் முஸ்லிம்களோ 27.9 விழுக்காட்டினர்.

- 9.1 விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்ட குஜராத்தில் சிறையிலிருக்கும் முஸ்லிம்கள் 25.1 விழுக்காட்டினர்.

இந்த எண்ணிக்கையில் குற்றங்களுக்காக தண்டனை அளிக்கப் பட்டவர்களோடு விசாரணைக்காக தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்களும் அடங்குவர்.

இந்தப் புள்ளி விவரங்களோடு ஒப்புநோக்குகையில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் ஒரு சிறு விழுக்காட்டையே முஸ்லிம்கள் பெற்றிருக்கிறார்கள் என்ற உண்மை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எதில் இட ஒதுக்கீடு வழங்க மறுத்தாலும், சிறையை நிரப்புவதில் அரசுகள் பாகுபாடின்றி இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு அவர்களின் மக்கள்தொகை வீதத்தை விட மிக அதிகப் பங்கு தருகிறார்கள்.

இந்திய முஸ்லிம்களின் இந்த பரிதாபமான நிலைக்கு யார் அல்லது எது காரணம்?

- வறுமைதான் முஸ்லிம்களில் பெரும் விழுக்காட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு முக்கியக் காரணம் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது. நகர்ப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 44 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர். மற்ற சமூகங்களை சார்ந்தவர்களில் 28 விழுக்காட்டினர் மட்டுமே இந்த நிலையில் உள்ளனர்.

- காவல் துறையினரின் பாரபட்சமான செயல்பாடுகளும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு முறையான சட்ட உதவி கிடைக்காமலிருப்பதும் பல அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் அடைபட்டுக் கிடப்பதற்குக் காரணங்களாக இருக்கின்றன. “ஏதேனும் குற்றச் செயல்களில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருந்தால், ஒருவரை கைது செய்யவேண்டிய இடத்தில் பத்து பேரை காவல் துறையினர் கைது செய்கிறார்கள். பெரும்பாலான சமயங்களில், தேவையில்லாத போதும் பல அப்பாவிகள் கைது செய்யப் படுகிறார்கள். கடைசியில் இவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப் படுவதில்லை” என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சையது ஷஹாபுத்தீன்.

ஒரு முஸ்லிம் மீது போலீசாரால் ஏதாவது ஒரு வழக்கு தொடுக்கப்பட்ட உடனேயே அவரை குற்றவாளியாகக் கருதிக் கொண்டு சமூகம் ஒட்டுமொத்தமாக அவரைப் புறக்கணிப்பதும் சிறையில் அப்பாவி முஸ்லிம்கள் பெருமளவு நீதி கிடைக்காமல் அடைபட்டிருக்க காரணமாகின்றது. இந்த அதிர்ச்சி தரும் உண்மையை சமூகம் இனிமேலாவது கண்டுகொள்ள வேண்டும். ஊடகங்களும் இது போன்ற செய்திகளை பெரிய அளவில் பிரபலப் படுத்துவதும் இந்த வழக்குகளில் காவல் துறையின் வலுவிழந்த ஆதாரங்களால் குற்றம் நிரூபணம் செய்யப்படாமல் அப்பாவிகள் விடுதலை செய்யப்பட்டால் இதே ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதும் நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிகழ்வுகளாக உள்ளன.

இஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புகளும் இந்த அறிக்கையை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு, ஏழை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக திட்டங்கள் தீட்டி செயல்பட வேண்டியது மிக அவசியம். இஸ்லாமிய வர்த்தக நிறுவனங்களும் பண வசதி படைத்த முஸ்லிம்களும் இச்சேவைக்கு ஆதரவு அளிக்க முன்வர வேண்டும்.

நன்றி: சத்திய மார்க்கம்.காம்

5 Comments »

The URI to TrackBack this entry is: http://ibnubasheer.blogsome.com/2006/11/03/indian_prisons/trackback/

  1. 8-11-06 தேதி ஆனந்த விகடனில் எழுத்தாளர் ஞாநியின் ‘ஓ..பக்கங்கள்’ கட்டுரையிலிருந்து..
    ———
    இந்த வாரப் புதிர்!

    நம் நாட்டுச் சிறைகளில் இருக்கும் மொத்தக் கைதிகளின் எண்ணிக்கை 3,32,112. இவர்களில் இன்னமும் குற்ற வாளி என்று நிரூபிக்கப்படாமல், விசா ரணைக்குக் காத்திருக்கும் கைதிகள் எத்தனை பேர்?

    1. 2,391

    2. 23,914

    3. 2,39,146

    மூன்றாவது விடையில் உள்ளபடி, சுமார் 70 சதவிகிதம் கைதிகள் இன்னமும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாதவர்கள். இவர்களில் கணிசமானவர்கள், குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டிருந்தால் எத்தனைக் காலம் சிறைவாசமோ, அதைவிட அதிகக் காலமாகச் சிறையில் இருக்கிறார்கள்.

    சிறைக் கைதிகளின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் சதவிகிதமானது, மக்கள் தொகையில் அவர்களின் சதவிகிதத்தைவிட மிக அதிகம்! இந்த முஸ்லிம் கைதிகளில் பெரும்பாலானவர்கள் பயங்கரவாதக் குற்றங்களுக்காகக் கைதானவர்கள் இல்லை.

    Comment by இப்னு பஷீர் — November 3, 2006 @ 10:10 am

  2. :):)குண்டு வச்சா ஜெயில்ல போடாம பாரின் டூராண்ணே அனுப்புவாங்க??:)

    //இந்தப் புள்ளி விவரங்களோடு ஒப்புநோக்குகையில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் ஒரு சிறு விழுக்காட்டையே முஸ்லிம்கள் பெற்றிருக்கிறார்கள் என்ற உண்மை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.//

    குண்டு வக்கிறது வேற, படிச்சு வேல வாங்கறது வேறங்க…படிக்கிறது நீங்கதான் படிக்கணும்..அரசாங்கம் செய்ய முடியாது..ஹி..ஹி..என்னமோ போங்க…

    Comment by superman — November 3, 2006 @ 10:59 am

  3. //:):)குண்டு வச்சா ஜெயில்ல போடாம பாரின் டூராண்ணே அனுப்புவாங்க??:)//

    அய்யா சூப்புரமேன்,

    குண்டு வச்சவனை ஜெயில்ல போடலாம். ஆனா குண்டு வச்சிருந்த தீவிரவாதியை சும்மா விட்டுட்டு அப்பாவிகளை புடிச்சு ஜெயில்ல போட்டா எப்படி?

    தப்பு செஞ்ச குற்றவாளியை ஜெயில்ல போடலாம். விசாரணை பண்றதுக்காக எத்தனை வருடம்தான் ஒருத்தனை ஜெயில்ல வச்சிருக்கலாம்? அவன் ஏழையாவும் முஸ்லிமாவும் இருந்ததுதான் அவன் செஞ்ச குற்றமா?

    சட்டத்துக்கு முன்னாலே எல்லோரும் சமம்னா, காஞ்சி மட ஆளுங்க உள்ள போன வேகத்துல வெளியில வந்தது எப்படி? செல்வாக்கு உள்ளவங்கன்னா விசாரணை சீக்கிரம் நடக்கும். ஏழைன்னா ‘குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டிருந்தால் எத்தனைக் காலம் சிறைவாசமோ, அதைவிட அதிகக் காலமாகச் சிறையில்’ இருக்கனுமா?

    ஜெயில்ல இருக்குற மொத்தக் கைதிகள் 3 லட்சம் பேருன்னா அதுல விசாரணைக்காக காத்திருக்குறவங்க மட்டும் 2 லட்சத்துக்கு மேல இருக்குறது எப்படி? ஏன்? அவங்கள்லாம் ஏழைங்குறதால வெளியில இருந்தா அவனுக்கு சாப்பட்டுக்கு கஷ்டமா இருக்குமேன்னு உள்ள வச்சு மக்கள் வரிப்பணத்துல சாப்பாடு போட்டுக் கிட்டிருக்காங்களா என்ன?

    //படிக்கிறது நீங்கதான் படிக்கணும்..அரசாங்கம் செய்ய முடியாது..//

    உண்மைதான். இப்படி உங்கள மாதிரி நாலு பேரு எடுத்துச் சொன்னாலாவது இந்த முஸ்லிம்களுக்கு புரியுதான்னு பார்ப்போம்.

    Comment by இப்னு பஷீர் — November 3, 2006 @ 1:38 pm

  4. Realy it is painful .All people must understand about this status of muslims in our country.

    Comment by mohamed masoud — November 3, 2006 @ 2:22 pm

  5. JAYARAMAN SAID ALLAH GAVE UP ON MUSLIM AROUND THE GLOBE. NOT ONLY JAYARAMAN AND HIS “PAJANAI PARTY”, MUSLIMS MUST ALSO UNDERSTAND THAT, MUSLIM SHOULD LEARN TO LIVE AS PER QURAN AND SUNNAH. IF NOT THEY WILL BE REPLACED BY ANOTHER COMMUNITY. IT IS A WARNING FROM QURAN.

    IF ONLY THE MUSLIMS UNDERSTAND THIS AND ARRANGE THEIR LIFE ACCORDINGLY, INSHA ALLAH THEY WOULD RULE THE WORLD IN THE NEAR FUTURE…!

    Comment by FATHIMA — November 5, 2006 @ 11:50 am

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>



Anti-spam measure: please retype the above text into the box provided.