வக்கிர சிந்தனையாளர்களின் வரலாற்றுப் புரட்டுகள் - 2. அரசியல் இஸ்லாமும் சிலை வழிபாடும்!
March 21, 2007கோயபல்ஸ் என்ற பெயரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘இன்றைய கோயபல்ஸ்’ என்று பட்டமளிக்க தகுதியானவர் இந்த வக்கிர சிந்தனையாளர். வரலாறுகளை திரிப்பதே தமது முழுநேர தொழிலாக கொண்டிருப்பார் போலிருக்கிறது.
சிலை வணக்கம் உள்ளிட்ட இறைவனுக்கு இணை வைக்கும் எல்லா காரியங்களையும் தடுப்பதை அடிப்படையாக கொண்ட மார்க்கம் இஸ்லாம். ஓரிறைக் கொள்கையை நிலை நாட்டுவதே இறைத்தூதர்களின் தலையாய பணி!
இந்த அடிப்படையான விஷயத்திலேயே தனது விஷமத்தை காட்டுகிறார் இந்த நபர் பாருங்கள்!
இந்த வக்கிர சிந்தனையாளர் தனது ‘திண்ணை’ கட்டுரை ஒன்றில் சொல்கிறார்;
(‘நபிகள் நாயகத்தின் வாழ்வு - அன்னை ஜைனப்பின் மணம் - இறுதி நபி சில விளக்கங்கள்’ - நேசகுமார் - திண்ணை 16/12/2004)“நபிகளாரின் காலத்திலேயே, ஆன்மீக இஸ்லாம் பின் சென்று அரசியல் இஸ்லாம் முன்னிலைப் படுத்தப்பட்டு, சிலை வழிபாட்டையும் ஏனைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் முஹம்மது அவர்களின் நபித்துவத்தை மட்டும் மறுத்தளிக்காதீர்கள் என்ற கோரிக்கையே பிரதானப் படுத்தப் பட்டது”
இதைத் தொடர்ந்து, சகோ. அப்துல்லா அவர்கள் இந்த நபரிடம் தொடுத்த கேள்விகள்:
“இதன் மூலம் எனக்கு தோன்றக் கூடிய கேள்விகளுக்கு நேசகுமார் அவர்கள் பதிலளித்து, இஸ்லாத்தை எனக்கு நன்கு அறிமுகப்படுத்துமாறு வேண்டுகிறேன்.
ஒன்று, அவரது பிதற்றல்களுக்கான ஆதாரம். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்.
இரண்டாவது, இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, இறைவனுக்கு இணை வைத்தல் கூடாது என்பதே. எனவே, எப்படி நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உதறிவிட்டு, நீங்கள் சிலைகளை வேண்டுமானலும் வணங்கிக் கொள்ளுங்கள், ஆனால், என்னுடைய நபித்துவத்தை மட்டும் மறுத்துவிடாதீர்கள் என்று தனது கோரிக்கையை பிரதானப் படுத்தியிருக்க முடியும்?
நேசகுமாரின் வரிகள் “நபிகளாரின் காலத்திலேயெ” என்று அழுத்தமாகத் தொடங்கியிருப்பதால், பதில்கள் நபிகளாரின் காலத்திற்க்கு பிறகு வந்த கதை எல்லாம் இல்லாமல், நபிகளாரின் காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு, பதில் சொல்ல வேண்டுகிறேன்.
பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி!”
சகோ. அப்துல்லா அவர்கள் 3 மார்ச் 2005 அன்று கேட்ட இந்த கேள்விகள், இரண்டு ஆண்டுகள் முழுதாக முடிந்து விட்ட நிலையிலும் இன்னும் பதிலளிக்கப் பட்டதாக தெரியவில்லை. ஒருவேளை வேறு எங்காவது இதற்கு பதிலளிக்கப் பட்டிருந்தால் அதன் சுட்டியை தரும்படியும், இன்னும் பதிலளிக்கப் படாமல் இருந்தால், மேலும் தாமதிக்காமல் உடனடியாக பதிலளிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.
