வக்கிர சிந்தனையாளர்களின் வரலாற்றுப் புரட்டுகள் - 3. யார் முஃமின்?

March 22, 2007

“அரபி மொழியில் ‘அலிஃப், பே ‘ (அகரம்) கூட தெரியாமல் குர்ஆனின் வசனங்களுக்கு அர்த்தம் இப்படித்தான், அப்படித்தான் என்று வாதிடுவதைப் போல ஒரு நேசகுமார்த்தனமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது! திருக்குர்ஆனின் அர்த்தங்களில் சந்தேகம் கொள்பவர்கள் யாராக இருந்தாலும், தெரிந்தவர்களிடம் இப்படித்தானா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். அதுதான் முறை. அதைவிட்டுவிட்டு, இப்படித்தான் அப்படித்தான் என்று வாதிடுவதற்குக் காரணம் அறியாமையாக இருக்க வேண்டும் அல்லது திரு. நேசகுமாருக்கு வேறு ஏதாவது நோக்கமிருக்க வேண்டும்.” - நாகூர் ரூமி - திண்ணை - அக்டோபர் 28, 2004

தனது இந்துமத வேதங்களை இங்கொன்றும் அங்கொன்றுமாக படித்து ‘இது நமக்கு விளங்காத விஷயம். இதன் பக்கமே போகத் தேவையில்லை’ என்று முடிவுக்கு வந்த வக்கிர சிந்தனையாளர், அரபி மொழியிலுள்ள குர்ஆனுக்கு வியாக்கியானம் செய்வதை பாருங்கள்!

“திருக்குரானில் இந்த இரு அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள இறைவசனங்களே, பர்தா முறைக்கு அடித்தளமாக திருக்குரானில் காணப்படுகின்றன. இவையும், ஒட்டு மொத்த மனித குலத்திற்கு அல்லாஹ் இடப்பட்ட கட்டளையோ அல்லது எல்லா முஸ்லீம்களுக்குமான இறைவனின் கட்டளையோ அல்ல. முஃமின்கள் என்று இங்கு குறிப்பிடப் பட்டிருப்பது கூட எல்லா இடங்களிலும் இருந்த முஸ்லீம்களை குறிக்கு முகமாக அல்ல, அப்போது முகமது நபிகளின் கூட இருந்த கூட்டத்தாருக்கு அல்லாஹ், இரண்டு குறிப்பிடத்தக்க சம்பவங்களின் போது தெரிவித்த போதனைகளே ஆகும்.” - இஸ்லாத்தில் பர்தா - வரலாறும், நிகழ்வுகளும் - திண்ணை 11 நவம்பர் 2004

இந்த அரைகுறையின் பிதற்றல்களுக்கு சகோ.சலாஹுத்தின் தந்த விளக்கம்:

“இறைவன் நபிகளாரின் துணைவிகளுக்கு மட்டும் என்று கட்டளைகளை பிறப்பிக்க நாடினால் வசனம் 33:32ல் உள்ளவாறு ‘நபியின் மனைவிகளே! ‘ என்று நேரடியாக அழைத்திருப்பான். மாறாக ‘மூஃமின்களே ‘ என்று அழைத்தால் அது ஒட்டுமொத்த முஸ்லிம்களைத்தான் குறிக்கும். ‘மூஃமின் ‘ என்ற சொல்லின் பொருள் நம்பிக்கையாளர் என்பதாகும். அதாவது இஸ்லாத்தின் கொள்கைகளின்மீது மனதாற நம்பிக்கைகொண்ட அனைவரையும் இந்த சொல்
குறிக்கும். நீங்கள் சொல்வதுபோல் இந்த சொல் அப்போது நபிகளாரின் கூட இருந்த கூட்டத்தாருக்கு மட்டுமே பொருந்தும் என்றால், குர்ஆனில் எண்ணற்ற இடங்களில் ‘மூஃமின்களே! ‘ என்று நம்பிக்கையாளர்களை அழைத்து இறைவன் சொல்லும் கட்டளைகளை என்னவென்று சொல்வீர்கள்?” -
திண்ணை - நவம்பர் 18,2004 - நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா

இதற்கு வந்த பதில்:

“இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்களுக்கு பர்தா முறை ஏற்பட்டதன் பிண்ணனியை விளக்கி திண்ணையில் வெளியான எனது பர்தா பற்றிய கட்டுரையைத் தொடர்ந்து, எனக்கு பர்தா பற்றி விளக்கி திண்ணையில் கடிதம் எழுதியுள்ள இஸ்லாமிய சகோதரர் சலாஹுதீன், முஃமீன்கள் என்ற வார்த்தைக்கு நான் நபிகளாரைச் சுற்றியிருந்த கூட்டத்தாரைக் குறிக்கும் வார்த்தை அது என்று சொன்னதை மறுத்து, அது ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தையுமே குறிக்கும் என்று வாதிட்டுள்ளார்.

இது குறித்து, விரிவாக ஒரு தனி கட்டுரை எழுதவுள்ளேன். ஏனென்றால், இந்த மூஃமீன்கள் மற்றும் காஃபிர்களுக்கான அர்த்தப் படுத்துதல் பல கோணங்களில் திருக்குரானின் போதனைகளை சிதைத்து, இஸ்லாமியர்களை தொடர்ந்து 1425 வருடங்களுக்கு முன்பிருந்த போரிடும் நிலையிலேயே (war mode) வைத்துள்ளதால், இப்படியான அர்த்தப் படுத்துதலே இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தொடர்ந்து அச்சமுதாயத்தில் தோற்றுவித்துக் கொண்டிருக்கும், தோற்றுவாயாக உள்ளது.

எனவே அதிமுக்கியமான இந்த அர்த்தப் படுத்துதலுக்கு தனியே விவரமாக மேற்கோள்களுடன் விரிவான ஒரு கட்டுரை எழுதுகிறேன்.
திண்ணை - December 9, 2004 - இஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் - II

கட்டுரைக்காக காத்திருந்த சலாஹுத்தின்..

“முஃமின் என்ற வார்த்தையின் பொருள் குறித்து நேசகுமார் தனி கட்டுரை எழுதப்போவதாக சொல்லியிருப்பதால் அந்தக் கட்டுரை வந்ததும் அதற்குறிய விளக்கங்களை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.”
திண்ணை - December 23, 2004 - நேச குமாருக்கு விளக்கம்: பர்தாவும் அன்னை ஜைனப்பின் திருமணமும்!

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனது! கட்டுரை வந்ததா என்பது தெரியவில்லை!

2 Comments »

The URI to TrackBack this entry is: http://ibnubasheer.blogsome.com/2007/03/22/p65/trackback/

  1. இப்னு பஷீர், அபூமுஹை என்று ஆளுக்கு ஆள் கேள்வி மேல் கேள்வி கேட்டால் எங்கிருந்தய்யா பதில் சொல்வார் இந்த மே(ல்)தாவி! ஏதேனும் இணைய தள சுட்டிகள் இருந்தால் “பொறுக்கி”ப் போடுவார்.

    “வக்கிர சிந்தனையாளர்”, “மன நோயாளி” என்ற பட்டத்துடன் இணைய பொறுக்கி என்ற சிறப்புப் பெறயரை என் சார்பாக அவருக்கு சூட்டுகிறேன்.

    Comment by அபூசுஹைமா — March 22, 2007 @ 6:26 pm

  2. சகோ. இப்னு பஷீர்,

    ஒரு முடிவோடு தான் இறங்கியிருக்கிறீர்கள் போலிருக்கிறது.

    தடித்த தோல் உடைய மானங்கெட்ட ஜென்மங்களிடம் என்ன எதிர்பார்ப்பது?

    உள்வாங்க ஓடிப் போனவரை அவரது ஜல்லி அடிவருடி ‘மூடர்’களாவது தேடிக் கண்டுபிடித்துக் கொடுங்களேன்.

    அல்லது கே ஜி பிள்ளைகளுக்கு புரியுமாறு பாடம் நடத்தும் இன்னொரு அண்ணாச்சியாவது விளக்குவாரா?

    Comment by அட்றா சக்கை — March 22, 2007 @ 7:52 pm

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>



Anti-spam measure: please retype the above text into the box provided.